கனவில்
உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!
13 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
அம்பூட்டு ரகசியம் கேட்ட காது யானை காது ஆயிருக்குமே!
Nice one ;)
Welcome back Madam!!!
sema..love tht feel :)
அனைத்தும் அருமை!! keep going!:)
//கண்களை மூடிக்கொள் காதில் ரகசியம் சொல்வேன்என நீ சொல்லியவையெல்லாம்இன்றுவரை நீ மட்டுமே அறிந்த ரகசியங்கள்...//
பின்னிட்டீங்க போங்க:)
கவிதைக்கு ஏற்ற படங்களும் சூப்பர்!
//திணறுக்கிறேன்//
//எங்கிறாய்//
பையன் ரொம்ப தொல்லை பண்றானோ??
அருமை :)
good.continue
paduthiyathil pidithatha? whatay!
paduthiyathil pidithatha? whatay!
நிறைய படுத்தட்டும், நிறையக் கவிதைகள் கிடைக்குமே... எல்லாமே அழகு.
:-))
படித்ததில்
பிடித்தது என்ன?
என்று கேட்கிறாய்...
உன் கண்களைக்கண்டதும்
அனைத்தும் மறந்த எனக்கு,
நீ படுத்தியதில்
பிடித்தது கேட்டிருந்தால்
சொல்லியிருப்பேன்...////
ரசித்த வரிகள்! வாழ்த்துக்கள்!
Post a Comment