டல்லரசு
1 day ago
மணித்துளிகள் சொட்டுச் சொட்டாய்
நெற்றிப் பொட்டில் தெறித்து
உயிர் நனைக்க....
காதலும், காற்று வாங்க
கனவுடன் கைக்கோர்த்து,
கதைகள் சொல்ல...
கண்களுக்குள் கனல் மெல்ல
கனன்றெரிய...
சிருங்கார ரசமிழந்து
நாழிகைகள் நான் கடத்த...
ஏதோ ஒரு கனவில்
எங்கோ சஞ்சரித்து..
போர்வைக்குள் ஒருக்களித்திருக்கும் உனக்கு
ஏனோ வரைந்துப்பார்க்கிறேன்
ஹிட்லரின் மீசை....
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Thursday, December 02, 2010 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 8 Comments