காதலும் கற்று மற(?!)-4
காதலும் கற்று மற(?!)- 1 , 2 , 3 .
"எங்க மேடம் காலங்கார்தால, அதுவும் எங்கிட்ட கூட சொல்லாம, எங்க கிளம்பிட்ட?"
"போயிட்டு வந்து சொல்லவா?"
"ஏன் இப்ப சொல்லக்கூடாதா?"
"ம்ஹீம்"
"ஏதோ பண்ணு", சிரித்துக்கொண்டே விடைபெற்றாள் சத்யா.
காலை மணி 7:30. மிக அமைதியான கல்லூரி மைதானம். இதுவரைப் பார்த்திராத வானம். 'ம்ம்ம் ஹாஸ்டல் வந்ததில இருந்து நல்லா தூங்க கத்துக்கிட்டேன். எவ்ளோ நல்லா இருக்கு இன்னைக்கு க்ளைமேட்? சொன்னபடி வருவானா?', நினைவுகளில் ஆழ்ந்தாள். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என முடிவு செய்து, சத்யாவை சந்திக்க தினேஷிடம் சொல்லி அனுப்பியிருந்தாள். அவன் சொல்லியிருப்பானா? அப்படியே சொல்லியிருந்தாளலும் சத்யா வர சம்மதிப்பானா? என பலக்கேள்விகள் அவளுள், சத்யா வருகையை காணும் வரை.
"ஹாய்"
"ஹாய்"
"சத்யா"
"சொல்லுங்க"
"பாக்கனும்னு சொன்னீங்கன்னு தினேஷ் சொன்னான். எனக்கு முதல்ல நம்பிக்கையே இல்ல. சும்மா கலாய்க்கிறான்னு நினைச்சேன். பட் இங்கவந்து பார்த்தா. வாட் எ சர்ப்ரைஸ்?"
"ம்ம்ம் நாந்தான் வர சொன்னேன். தேங்க்ஸ் வந்ததுக்கு. சாரி டிஸ்ட்ரப் பண்றதுக்கு"
"Thats ok. சொல்லுங்க என்ன விஷயம்?"
"உங்களுக்கு தெரியாததில்ல. நீங்க யார்? என்ன? எப்படிப்பட்டவர்? இப்படி எந்த விஷயமும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உங்க பேர் மட்டும் தான். உங்களுக்கும் அப்படிதான்னு நினைக்கிறேன். எது எப்படி இருந்தாலும் எனக்கு இந்த காதல், கத்தரிக்காயில் எல்லாம் இஷ்டம் இல்ல. அப்படி ஒரு எண்ணம் இருந்தா தயவு செய்து மாத்திக்கோங்க. இத சொல்லத்தான் நான் கூப்பிட்டேன். வந்ததுக்கு தேங்க்ஸ்".
"நல்லா பேசறீங்க"
"சத்யா... நான்...."
"நான் இன்னும் முடிக்கல. நான் உங்கள லவ் பண்றேன்னு என்னைக்காவது உங்கக்கிட்ட வந்து சொன்னேனா? சொல்லுங்க."
"இல்ல"
"அப்பறம் எப்படி இப்படி என்ன பத்தி ஒரு முடிவுக்கு வந்தீங்க?"
"ஆனா, உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம்.."
"அவங்க ஆயிரம் சொல்வாங்க. அதுக்கெல்லாம் நான் என்ன பண்ண முடியும்?"
"என்னடா சொல்ற? அந்த பொண்ணதான் கல்யாணம் பண்ணிப்பேன். என்னமோ உயிருக்குயிரா காதலிக்கிறேன்னு எங்ககிட்ட சொல்லிட்டு அவகிட்ட அப்படியே உல்டாவா சொல்லிட்டு வந்துருக்கியே, ஏண்டா? இல்ல நீ சும்மா விளையாடுறியா?"
"ம்ம்ம் நிஜமாவே காதலிக்கிறேன். ஆனா, அவ கோவமா கேட்ட அந்த சமயத்துல சொல்லிருந்தேன்னா அவளுக்கு என் மேல நிச்சயம் வெறுப்பு வந்திருக்கும். அதோட இல்லாம காதலே பிடிக்காதுன்னு சொல்றவகிட்ட போய் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு சொல்லக்கூடாது மச்சி. அதெல்லாம் டைம் பாத்துதான் சொல்லனும்."
"எங்கேயிருந்துடா வருது? காதல்னா மட்டும் இவ்ளோ யோசனைகள்? இத கொஞ்சம் படிப்பிலையும் காட்டினா நல்லா தான் இருக்கும்..ம்ஹீம்ம்ம்"
"நிஜமாவா சொல்ற? அவன் அப்படியா சொன்னான்?"
"ஆமா மிருது... கடைசி வரைக்கும் அவன் என்ன காதலிக்கறதாகவோ, குறைந்தபட்சம் சைட்டடிக்கறதாகவோ கூட ஒத்துக்கல. எனக்கு ஒன்னுமே புரியல"
"எனக்கெல்லாம் புரிஞ்சிடிச்சி. படத்துல எல்லாம் ஹீரோயின லவ் பண்ண முதல்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ கரெக்ட் பண்ணுவாங்கல்ல? அதுமாதிரி தான் அவன் உன்ன அப்ரோச் பண்ணிருக்கான்"
"அப்படியா சொல்ற? சரி அப்போ அந்த ஹீரோயின் யாரு?"
"உனக்கு ரொம்ப வேண்டியவங்க தான்"
"யாரு அந்த வனிதாவா?"
"இல்ல"
"ம்ம்ம் கண்கொட்டாம அவனையே பாத்துட்டு இருப்பாளே அந்த ரூபா. அவளா?"
"இல்ல"
"வேற... ம்ம்ம்ம்"
"பிசாசே. உங்கூடவே சுத்துறேனே என் பேர சொல்லமாட்ட?"
"ச்சீ ச்சீ. அவனுக்கு ரசனை இல்லயா என்ன? உன்ன போயா சுத்துவான்?", கேட்டுவிட்டு கலகலவென சிரித்தவளை முறைத்தாள் மிருதுளா. எது எப்படியோ அவன் தன்னை விட்டுவிட்டான் என நிம்மதி அடைந்ததில் நாட்கள் சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் சென்றன.
"நீ ஏன் சத்யா கல்சுரல்ஸ் ஒன்னுத்துலையும் பார்ட்டிசிப்பேட் பண்ணல?"
"ம்ம் போ. க்ளாஸ் கட்டாகும்"
"அடிப்பாவி. அதுக்காகத்தான் இங்க பாதி பேர் அதுல கலந்ததே"
"ம்ம்ம் பாக்கலாம்"
"நீ என்னத்த பாக்குறது? சீக்கிரம் எதுல சேரரன்னு பேர் குடு. டேட் முடிய போகுது. இல்லேன்னா உன் பேர நானே எதுலயாவது சேத்துடுவேன்"
"ஹே அப்படியெல்லாம் ஒன்னும் செஞ்சிடாத. நானே பேர் தரேன் ஓகே."
"ம்ம்ம்"
"இல்ல நான் எதுலையும் பார்ட்டிசிப்பேட் பண்ணல"
"எப்படி விட்டாங்க உங்க டிபார்ட்மெண்ட்ல?"
"மெஹந்தில..."
"ஓ போடறீங்களா?"
"இல்ல. என் கைல போடறாங்க"
"ஹா ஹா ஹா", அவன் பெரிதாக சிரித்தது, அவளுள் கோவத்தைத் தூண்டியது. அவள் முக மாற்றம் கண்டவன் சிரிப்பதை நிறுத்தினான்.
"சாரி சத்யா"
"ம்ம்ம் பரவால்ல"
"ம்ம் உங்க கைக்கு மெஹந்தி நல்லாவே இருக்கும். All the best"
"Thanks"
அவன் எதிலும் பங்கு கொண்டானா எனக்கேட்க மறந்த தன்னைத் தானே திட்டிக்கொண்டாள். எனினும் அவன் சிரித்ததை நினைத்து தான் இப்போது தனிமையில் சிரிக்கிறோம் என்பதை எப்படியோ மறந்துவிட்டிருந்தாள்.
"ஏய் என்ன தனியா சிரிக்கற?"
"ஒன்னுமில்ல சத்யா கிண்டல் பண்ணான். அத நினைச்சுதான் சிரிக்கிறேன்."
"சாதாரணமா அவன் கிண்டல் பண்ணா, திமிர் பிடிச்சவன்னு திட்டுவ. இன்னைக்கென்ன அதிசயமா சிரிக்கிற? சம்திங்க் ராங்க்"
"லூஸ் அதெல்லாம் ஒன்னுமில்ல. போய் வேலைய பாரு"
"சரிங்க மேடம்"
மிருதுளா சொன்னது சரியென்றே தோன்றினாலும். அவன் தன்னை காதலிக்கவில்லை எனத்தெரிந்ததால் தான், தான் இவ்வாறிருப்பதாக சொல்லிக்கொண்டாள். அதுவும் நிலைக்கப்போவதில்லை என பாவம் அவள் முன்னமே அறிந்திருக்கவாய்ப்பில்லை..
-தொடரும்..
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Friday, December 11, 2009 | கனவு காண: கதை, கதை மாதிரி, தொடர்கதை | 20 Comments
சுயம் இழந்த பின்..
ஸ்ரீமதி.
Thursday, December 10, 2009 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 17 Comments
காதலும் கற்று மற(?!)-3
காதலும் கற்று மற(?!)- 1 , 2 .
சத்யாவை கவரும் விதமாக அவன் அதீதமாக எதுவும் செய்யவில்லை என்றாலும், அவன் அவளை தொடர்வதும், சீண்டுவதும், அவளின் கோபங்களையும், செய்கைகளையும் அவளின் சிறுசிறு முகச்சுழிப்புகளையும் தன் நண்பர்காளுடன் சிலாகிக்கத் தவறுவதே இல்லை. அன்றும் அவளின் குறும்புத்தனமான செய்கை இவனை கவருவதாக இருந்தது. அது கல்லூரியின் கலையரங்கம் என்பதையும் மறந்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் அது நடந்தது,....
சுனில், சத்யாவுடன் படிப்பவன் இவளின் குறும்புகளை ரசிப்பவன். அன்று கேட்டேவிட்டான்.
"Hey Sathya, Can you plz gimme ur mom's mobile number?"
"What for?"
"ம்ம்ம் எப்படியும் நீ இந்த நாலு வருஷம் படிப்ப முடிச்சதும் உங்க வீட்ல கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணுவானங்க, அப்போ எதுக்கு உங்க அம்மா கஷ்டப்பட்டு மாப்பிள்ளைத் தேடனும்? இப்போவே நான் சொல்லி வெச்சிட்டா, அப்போ அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்குமே அதான்..", சொல்லிவிட்டு கண்ணடித்து சிரித்தான். அவன் சொன்னது உண்மையில்லை என சத்யாவிற்கும் தெரியும், எனவே எதுவும் பேசாது மௌனம் காத்தாள். ஆனால், அங்கு நடந்ததோ வேறு, தானிருந்த இருக்கையிலிருந்து வேகமாக எழுந்த சத்யா, கொத்தாக சுனிலின் சட்டையைப் பிடித்தான். நிலைமையின் தீவிரம் உணர்ந்த தினேஷ் அவனைத் தடுத்தான். எனினும் கோபம் குறையாத சத்யா, அவனை எரித்துவிடுவது போல் பார்த்து, அவனைத் தன் கைப்பிடியிலிருந்து விடுவித்தான். இது எதையும் எதிர்ப்பாரா சத்யா அச்சடித்த பதுமைப் போல் நின்றாள். அதனால் இது நேரம் வரை தன்னுடன் நின்ற மிருதுளா, அவளை அகன்று சென்றதையும் அவள் கவனித்தாளில்லை.
"கொஞ்சமாவது அறிவு இருக்கறவன் எவனும் இப்படி ஒரு காரியம் பண்ணமாட்டான்", தினேஷ் கொதித்துக்கொண்டிருந்தான்.
"என்னமோ தெரியலடா. அவ எனக்கே சொந்தம்ன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். இதுக்கு நடுவில யார் வந்தாலும் நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது", சத்யாவிடமிருந்து வந்த வார்த்தைகள் அனைவரையும் கொஞ்சம் அதிர வைத்தது.
"இவன் என்னடா சொல்றான்?", கேட்டுக்கொண்டே கணேஷ், தினேஷிடம் திரும்பினான்.
"என்ன நொன்னடா சொல்றான்? அன்னைக்கு சொல்ல சொல்ல கேட்காம அவன ஏத்திவிட்டுட்டு இப்போ கேள்வி கேட்கறியா?"
"டேய் அவன் ஏதோ சும்மா சைட் அடிக்கறன்னு நாங்க எல்லாம் நினைச்சோம் டா. ஆனா அவன் இவ்ளோ சீரியஸா இருப்பான்னு நினைக்கவே இல்ல."
"ஏண்டா அந்த பொண்ணு என்ன நினைக்கும்ன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தியாடா நீ?"
"மிருதுளாவ பாத்தீங்களா?", கிட்டத்தட்ட எதிர்ப்படும் எல்லோரிடமும் விசாரித்துவிட்டிருந்தாள். 'இல்லை' என்ற பதில் பழகிவிட்டிருந்தது.
'எங்க போயிருப்பா?', யோசித்தவாறு நடந்தவளுக்கு அவர்கள் அடிக்கடி உட்கார்ந்து பேசும் விளையாட்டு மைதானத்தின் வேப்பமரம் மறந்து போனது ஆச்சர்யம் தான்.
"ஹே மிருதுளா தானே தேடற? அவ அங்க உக்காந்துருக்கா பாரு", தோழி காட்டிய இடத்தில் கன்னத்தில் கைவைத்து, பாதி முகம் மறைத்தபடி உட்கார்ந்திருந்தவள் மிருதுளா என இவள் அருகில் சென்று தான் தெரிந்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது.
"என்ன ஆச்சு மிருது? நான் உன்ன எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா? ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்க? அதுவும் எங்கிட்ட கூட சொல்லாம?"
"ஒன்னுமில்ல.. வா சாப்ட போலாம். லேட் ஆகிடிச்சு"
"இல்ல நீ ஏதோ சோகமா இருக்க, ஆனா சொல்லமாட்டேங்கிற"
"அதெல்லாம் இல்ல வா"
"சொல்லு ப்ளீஸ்"
"ஒன்னுமில்லடி ஒரு சின்ன வருத்தம் அவ்ளோ தான்."
"என்னன்னு சொல்லு"
"நான் தான் அந்த சத்யாவ முதல்ல பார்த்தேன். அவன் எனக்கில்லன்னு ஆச்சு.. சரி சுனிலாவது கிடைப்பான்னு நினைச்சேன். அதுவும் இல்ல. அதான் சோகம்."
நிஜமாகவே மிருதுளா சொன்ன காரணத்திற்கு சிரிப்பதா, அழுவதா எனக் குழம்பினாள் சத்யா.
"நல்லா யோசிச்சுட்டேண்டா.. அவ இத பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்ல. நான் அவள லவ் பண்றேன். அவளும் என்ன லவ் பண்ணனும்ன்னு நான் ஒன்னும் கட்டாயப்படுத்தலையே.. "
"ஆனா, நீ அவள டிஸ்ட்ரப் பண்றடா"
"அதுக்கு நான் பொறுப்பில்ல"
"அதுக்கு மட்டுமில்ல. நீ மொத்தமாவே பொறுப்பில்லாம தான் நடந்துக்கற", கோபமாக கத்திவிட்டு சென்றான் தினேஷ்.
தான் செய்வது சரி என்றே நம்பிக்கொண்டிருந்தான் சத்யா. அது போன்று ஒரு சம்பவத்தை அவன் எதிர்க்கொள்ளும் வரை...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Wednesday, December 02, 2009 | கனவு காண: கதை, கதை மாதிரி, தொடர்கதை | 9 Comments
கரையோரம்
ரசிகையாய் இங்கு...
கனவில் இதுவரை
கனவுகளில்
-
-
-
-
தீர்ப்பின் வழக்கு2 weeks ago
-
-
காதல் புத்தாண்டு1 month ago
-
மோட்சப் பிரசாதம்1 month ago
-
சீர்காழி கோவிந்தராஜன்2 months ago
-
-
போராளி - திரைவிமர்சனம்5 months ago
-
வாழ்த்துகள் தீபா @ கபீஷ்8 months ago
-
விடையாய் நீ!!8 months ago
-
‘இ’ எனும் நைட்மேர்10 months ago
-
நிழற்படம்1 year ago
-
ஸ்டேட்மெண்ட்.1 year ago
-
எண்ணங்கள் விரிக்கும் வலை...!1 year ago
-
போஸ்டர் கலாச்சாரம்1 year ago
-
மீள்வருகை2 years ago
-
ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க!!!2 years ago
-
நம்பிக்கை துரோகம்2 years ago
-
வளமான வாழ்த்துக்கள்2 years ago
-
Should I or Shouldn’t I3 years ago
-
இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?3 years ago
-
காதலிப்போமா?????3 years ago
கனவில்
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!





