சிரிக்கவா?அழவா??
ஸ்ரீமதி.
Monday, July 06, 2009 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி, சோகம் | 25 Comments
மழை... கதம்பம்ன்னும் சொல்லலாம்...
ஊர்ல கொஞ்சமா மழை பெய்ய ஆரம்பிசிருக்கு. ஏதோ நம்மலால எல்லாரும் நல்லா இருந்தா சரி. அக்கா தான் சொன்னா நீ இப்போல்லாம் சீக்கிரம் எழுந்துக்கற, ஒழுங்கா சாப்பிடற, மழை வரும்ன்னு. நாலு பேர் நல்லா இருப்பாங்கன்னா எதுவுமே தப்பில்ல. ;-)
இது நாயகன் பட வசனம் தானே.. ம்ம் அந்தப்படத்துல கமல் பொண்ணா நடிச்சிருக்குற நடிகை பேர் என்ன? :-( ரொம்ப நாளா நானும் அவங்க பேர தெரிஞ்சிக்க ட்ரை பண்றேன் ம்ஹீம் தெரியல...
பேர்.. இது எனக்கு ஒரு பெரிய தொல்லை.. பேர மறந்து தொலைகிறேன். அப்பறம் அந்த பொண்ணு எதிர்ல வரும்போது தெரியாத மாதிரி போலாம்னாலும் முடியல.
"ஹாய் ஸ்ரீ, எப்படி இருக்க?"
"ஓ... நல்லா இருக்கேனே... தாங்க்ஸ்"
இனிதான் பிரச்சனையே அவங்க என்ன நல்லா இருக்கியான்னு கேட்டாங்கல்ல வித் பேரோட? இப்போ நான் கேட்கனும் வித் பேரோட... :-(( நீ எப்படி இருக்கன்னு கேட்டாலும் பிரச்சனை, நீங்க எப்படி இருக்கீங்கன்னாலும் பிரச்சனை.. ஏன்னா அவங்கள முதல்ல பார்த்த போது என்ன சொன்னேனோ அத தானே மெயின்டெயின் பண்ணனும்? நாம பாட்டுக்கு மரியாதைக் கொடுத்து பழக்கிட்டா அப்பறம் கஷ்டம்... அதனால கஷ்ட்டப்பட்டு மூளைய கசக்கி,
"Then, How do u do?"
அப்படின்னு கேட்டுடுவேன்... ஹி ஹி ஹி ஆங்கிலம் அந்த அரை நொடி மட்டும் வாழ்க.. ;-)))
வாழ்க... ம்ம்ம் இந்த வாழ்க கோஷம் போடறவங்கள பார்த்தாலே எனக்கு தலையே வெடிக்குது.
தலை... ம்ம்ம் அஜித் படம் ஒன்னும் வரலியா இப்போதைக்கு? கார்க்கிக்கு சந்தோஷமாவும், கொஞ்சம் கவலையாவும் இருக்கும். சந்தோஷம்- படம் வராததுக்கு, கவலையும்- படம் வராததுக்கு தான். கிண்டல் பண்ண ஆள் கிடைக்காதே. கார்த்திக்கு தெரியும்.
கார்த்திக்... அக்னி நட்சத்திரம் படத்துல கார்த்திக், நிரோஷா டூயட் "வாவா அன்பே, அன்பே" ரொம்ப பிடிச்ச பாட்டு... பாட்டு கேட்டே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.. என் டீம் லீடுக்கு பாட்டு கேட்டாலே பிடிக்காது. அவர்கிட்ட நான் பொங்கலுக்கு(இப்போ இல்ல...) ஊருக்கு போக லீவ் கேட்டதுக்கு(லீவுக்கே லீவ் கேட்டது நானா தான் இருப்பேன்) சொல்றார்,
"பொங்கலுக்கு லீவா? வாட் ஈஸ் திஸ் மா? எனக்கும் தான் பொங்கல் இருக்கு, நான் வொர்க் பண்ணல?".
இதே ஆளு என் ஃப்ரெண்ட் தலைவலிக்குது கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போகனும்ன்னு சொன்னதுக்கு, " எனக்கும் தான் தலை வலிக்குது"-ன்னு சொல்லிருக்கு. அடுத்த ஃப்ரெண்ட் லீவ் கேட்கப்போறான். உனக்கு எய்ட்ஸ்-ன்னு சொல்லுடான்னு சொல்லிருக்கோம். பார்க்கலாம் என்ன சொல்றார்ன்னு.
இவர சொல்லி ப்ரயோஜனமே இல்ல. இப்போ எல்லாருமே இப்படிதான், எல்லாமே இப்படிதான்... ஒரு பிசின்ஸ் மைண்டடா மாறிகிட்டே வராங்க. மனித நேயமே குறைஞ்சு போச்சோ? மனிதர்களுக்கே மதிப்பில்லாம போச்சோன்னு தோணுது... பெரியவங்க தான் இப்படி இருக்காங்க, சரி குழந்தைங்கள்ல இருந்து ஆரம்பிக்கலாம்னா, அவங்களையும் Read/ Write CD மாதிரி மாத்தி வெச்சிருக்காங்க. புக்ல இருக்கறதத்தவிர ஒன்னும் தெரிய மாட்டேங்குது... :-(( சகோதரத்துவம், சமத்துவம் எல்லாம் எங்கயோ தொல் பொருள் மாதிரி மறைஞ்சு போச்சு.
சமத்துவம்... ஷேர் ஆட்டோக்கள்லயும், Software companies-லயும் மட்டும் தான் இருக்கோன்னு தோணுது... பெண்கள் சம உரிமையும் அங்க தான்.
"நைட் 12 வரைக்குமெல்லாம் இருக்க முடியாது. எனக்கு ரெண்டு குழந்தை இருக்கு..."
"Well Miss, எனக்கும் தான் குழந்தை இருக்கு". என்னமோ இவர் தான் அந்த குழந்தைக்கு அம்மா மாதிரி... ம்ம்ம் என்ன சொல்ல? நாட்கள் இப்படியே போச்சு... ஆனா, இதுவும் நல்லாதான் இருந்தது.. :-))) இடையில் வலைச்சர ஆசிரியரா இருந்ததும் நல்ல மாறதலா இருந்தது. இன்னும் முழுதாக வெளிவரவில்லைன்னாலும், இப்போதைக்கு கொஞ்சம் தெளிவாக உணர்கிறேன். வெகு சீக்கிரம் வருகை வாடிக்கையாகும். :-))) அதுவரை கடைய பார்த்துக்கிட்ட எல்லாருக்கும் நன்றி... :-)))
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Friday, July 03, 2009 | கனவு காண: சும்மா, சுய புராணம், சோகம், தொடர்கதை, பதிவர் சதுரம், மரண மொக்கை, மொக்கை, வேறு | 22 Comments
நீளட்டும்....
அடங்கியிருந்தது காலம்,
காலுக்கடியில் நகரக்
காத்திருந்தது பூமி,
காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது
நாசித் துளைக்கும் காற்று,
நிசப்தங்கள் சப்தங்களாக
முடிச்சவிழ்ந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது அனைத்தும்..
எனினும் நினைத்தேன்,
அவன் இதழ்வழி
என் கரம் புகுந்து
உயிர்க்குடித்த
அந்த முதல் முத்தம்
இன்னும் கொஞ்சம்
நீண்டிருக்கலாமென...
ஸ்ரீமதி.
Wednesday, June 17, 2009 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 32 Comments
கேள்விகள் கார்த்திக்... பதில் மட்டும் நான்...
ரொம்ப நாள் கழிச்சு கரையோரம் வந்துருக்கேன் டேக் போஸ்ட்டோட.. அகநானூறு, அவுட் ஆஃப் சிலபஸ் கேள்விகளைத் தவிர மத்ததுக்கெல்லாம் பதில் மாதிரி ஏதோ ஒன்ன சொல்ல ட்ரை பண்ணிருக்கேன்...
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அப்பா அம்மா வெச்சதுனால... ரொம்ப பிடிக்கும் அது என்னமோ என்ன மாயமோ தெரியல என் பேர சொன்ன அடுத்த நிமிஷம் யாரா இருந்தாலும் ஸ்ரீ ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க ரொம்ப ஃ ப்ரென்ட்லியா இருக்கும்..
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சோகமா இருக்கும்போது அழறத எல்லாம் ஞாபகம் வெச்சிக்கறதில்ல... சந்தோஷத்துக்கு எதுக்கு அழனும்
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் எல்லா மதியமும் தயிர் சாதம் தான் நிறைய முறை அம்மா கிட்ட இதுக்காக சண்ட போட்ருக்கேன் பட் இப்போ அது தான் என் பேவரிட் டிஷ்
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
ம்ஹும் மாட்டேன். ஏன்னா நான் நல்லா பேசினாலும் கோவம் கொஞ்சம் அதிகம் நானா போய் யார் கிட்டயும் பேசமாட்டேன்.. சோ நான் என்னோட நட்ப என்னோட வெச்சிக்க மாட்டேன்.. ஒரே எண்ணம் கொண்ட ரெண்டுபேர் நிச்சயம் ரொம்ப நாள் சேர்ந்து இருக்க முடியாதுங்கறது என் எண்ணம்.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
சாரி எனக்கு ரெண்டுமே பார்க்க மட்டும் தான் பிடிக்கும்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள். அவர் எப்படிப்பட்டவர்ங்கறத ஈசியா தெரிஞ்சிக்கலாம் அதோட கண்ண பார்த்து பேசறதுதான் மேனர்ஸ்ன்னு எனக்கு சொல்லி தந்துருக்காங்க.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் தான் பிடிக்காத விஷயமும். எல்லார்கிட்டயும் ஈசியா ஃ ப்ரென்ட் ஆகிடரதுனால அவ்ளோ பேரையும் ஹேண்டில் பண்ண முடியாம தவிக்கிறேன்.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பாஸ்.
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பாஸ்.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கிரே வித் ஆரஞ்சு (ரொம்ப முக்கியம்)
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என் சிஸ்டம் பார்த்துகிட்டு. ஒரு கல் ஒரு கண்ணாடி கேட்டுட்டு இருக்கேன்.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ரெட்.
14. பிடித்த மணம்?
நிறைய. பெட்ரோல் வாசனை புது புத்தகத்தின் நடுப்பக்க வாசனை நெயில் பாலிஷ் வாசனை இன்னும் நிறைய அதுவும் நேரத்துக்கு தகுந்தார் போல மாறும்.
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
பிடிக்காத விஷயம்ன்னு பெரிசா எதுவும் இல்ல, அது தான் பிடிச்ச விஷயமே.. ;-)) காரணம் வேற என்ன "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்" தான்..
நாணல்.
புதியவன்.
ஜி3.
காயத்ரி.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நிறைய இருக்கு. ரொம்ப ரசிச்சு சிரிக்க வெச்சது இந்த பதிவு தான்.
17. பிடித்த விளையாட்டு?
பார்க்க கிரிக்கெட்.. விளையாட ஷெட்டில்கார்க்.. ;-))
18. கண்ணாடி அணிபவரா?
இல்லை.
19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ம்ம்ம்ம் அது திரைப்படம்ன்னு பிரிச்சு பார்க்கமுடியாத யதார்த்தமான படங்கள் ரொம்ப பிடிக்கும்..
20. கடைசியாகப் பார்த்த படம்?
அயன்.
21. பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஸ்ரீரங்கத்து தேவதைகள்-சுஜாதா
விழுந்த நட்சத்திரம்-சுஜாதா
(கார்த்திக் சேம் ஸ்வீட் நீ படிக்கற A Thousand Splendid Suns நானும் படிச்சிட்டு இருக்கேன்.. பட் ரெண்டு பெரும் அத சொல்ல வேண்டாம்ன்னு தான் வேற புக் சொல்லிருக்கேன். :-) )
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போ எனக்கு பிடிக்காம போகுதோ அப்போ மாத்திடுவேன் நாள் கணக்கெல்லாம் இல்ல.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
ம்ம்ம் பஞ்சு மிட்டாய், குல்பி ஐஸ் வரும்போது வருமே அந்த குட்டி மணி சத்தம் அது ரொம்ப பிடிக்கும். வாங்கறேனோ, இல்லையோ கேட்டதும் ஓடி வந்து பார்ப்பேன்.
பிடிக்காதது டிவி சத்தம்.. எப்பவுமே எனக்கு ரொம்ப அமைதியா இருக்கற சூழல் தான் பிடிக்கும். நான் சத்தத்திற்கு எதிரி.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஹைதிராபாத் (எத்தன கிலோ மீட்டர் கார்க்கி? )
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படின்னா??
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பொய் சொல்றது. உண்மை சொல்றதுனால வர விளைவுகள கூட தாங்க தயாரில்லாதவன், வாழ தகுதி இல்லாதவன் அப்படிங்கறது என் எண்ணம்.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோவம்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கேரளா (வாழ விருப்பப்பட்ட இடம்). மற்றபடி, மலையில் இருக்கும் எல்லா இடங்களும் எனக்கு பிடிக்கும்.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே எப்பவும்....
31.கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
பாஸ்.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரியில் விளக்க முடியாதது தான் வாழ்க்கை. வாழ்ந்துதான் பார்க்கணும்.
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Saturday, June 13, 2009 | கனவு காண: சுய புராணம், தொடர்விளையாட்டு, பதிவர் சதுரம், மொக்கை | 34 Comments
ஜூன் ஜூலை மாதத்தில்...
வாழ்க்கை எனக்கான நன்மைகள் எல்லாத்தையும் தரும் பொழுது ஜூன் மாதத்தில மட்டும் கொஞ்சம் அதிகமாவே தூவிவிட்டதா என்று எனக்கு எப்பவும் தோணும். ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது இந்த மாதத்தில் தான் புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க... எல்லாருக்கும் இது பொதுதான்னாலும் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்... ஏன்னா, எதிர்பாரா இடத்திலிருந்து பணவரவு வரும்ன்னு சொல்ற மாதிரி... நான் எதிர்ப்பார்க்காதவங்க கிட்டயிருந்தெல்லாம் நட்பு கிடைக்கும்... அதாவது, ஸ்கூல் ஆனாலும் காலேஜ் ஆனாலும் சீனியர்ஸ் எல்லாரும் என் ஃப்ரெண்ட்ஸா இருப்பாங்க... வேலைக்கு வந்த பிறகும் அப்படி தான்... அதேமாதிரியான ஒரு ஃபைன் டே ஜூன்ல(June 5th) தான் என் இந்த வலைப்பூவையும் ஆரம்பிச்சேன்.. (இத சொல்லதான் இவ்ளோ பில்டப்பா??) இப்போ ஒரு வயசாயாச்சு...

Happy Birthday to you... Sorry Belated Birthday wishes to you.. ;-))
வலைப்பூக்கு வராத இந்த நாட்கள்ல உருப்படியா எதுவும் செய்யல, படிக்கல வேலை மற்றும் எக்ஸாம்க்கு படிச்சத தவிர.... பிடிச்ச விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்ன்னு எதையும் யோசிச்சு செய்ய நேரம் இல்லாம இந்த நாட்கள் ஓடினது கூட நல்லா தான் இருந்தது.... இரவு 12:00 மணி சென்னை எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சிகிட்டேன்.... ஹைவே சோடியம் லாம்ப் வெளிச்சம் பிடிச்சிருந்தது... ஒரு நாள் விடுமுறையா ட்ரைன்ல போனது ரொம்ப பிடிச்சிருந்தது.... ஏதோ ஒரு பூஜாவுக்கு அவளின் காதலன் சொல்லால் சொல்ல முடியாத காதலையோ அல்லது சொன்ன காதலையோ எண்களால் எழுதிவைத்த அந்த ஜன்னல்... அவ்வளவு நெரிசல்லயும் யார்மேலையும் இடிக்காம காபி வித்துட்டு போன அந்த பையன்... ஏதோ ஒரு காதலிகிட்ட நொடிக்கு ஒருதரம் தாமதத்துக்காக மன்னிப்பு கேட்ட காதலன்... வழி பூரா திட்டிக்கிட்டே வந்த குடும்ப தலைவி....... இவ்வளவு கும்பல்லயும் அண்ணா கிட்ட டிரஸ் கலர்க்காக சேம் ஸ்வீட் கேட்ட குட்டி பொண்ணு.... எங்குமே சத்தமாக மட்டுமே பேசும் கறைத் துண்டை கழுத்தில் போட்டிருக்கும் வெள்ளை வெட்டி மனிதர்... எல்லாத்துக்கும் மேல தனக்கு வந்த காத்த எனக்கு வழி அனுப்பி ஊர் வந்து சேரும் வரைக்கும் கைக்குள்ளயே வெச்சு பாதுக்காத்து பத்திரமா கொண்டுவந்து சேர்த்த என் அண்ணாவுடனான அந்த அன்ரிசர்வ்ட் ரயில் பயணமும் கூட மஞ்சள் வானமும் ஆரஞ்சு சூரியனும் முடி கலைக்கும் ஜன்னல் காற்றும் இல்லேன்னாலுமே நல்லா தான் இருந்தது...
டிஸ்கி: யாரோட பதிவுகளையும் படிக்கல.. யார்கிட்டயும் பேசவும் முடியல.. "அச்சச்சோ என்னம்மா ஆச்சு??"-ன்னு பதறாம... "என்ன ஆச்சு? ஏன் எழுதல?"-ன்னு கேட்டு மெயில் பண்ண, கால் பண்ண எல்லாருக்கும் நன்றிகள். இப்பவும் கடமை என்னை வா வான்னு அழைக்கறதுனால தொடர்ந்து எழுத முடியும்ன்னு தோணல.. :-(( (ரொம்ப சந்தோஷம்).... அப்பறம் வரும்போதே டேக் போஸ்ட் தான் எழுதபோறேன்.... (கார்த்திக் பண்ண வேலை) சீக்கிரம் எழுதறேன்... இப்போதைக்கு பை..! பை..!
ஸ்ரீமதி.
Tuesday, June 09, 2009 | கனவு காண: அறிவிப்பு, சுய புராணம், பதிவர் சதுரம், மொக்கை, வாழ்த்து | 34 Comments
ஈரம்
மழையின் ஈரம்
காயாத இலைகள்
ஞாபகப்படுத்திச் சென்றன
நேற்றைய
உன் முத்தத்தை...
குளித்து தலைத்துவட்டி
நீர் தெளிப்பதற்குள்
அவசரமாக வரையப்பட்டிருந்தது
வாசலில் கோலம்.
குடைக் கொண்டவர்கள்
நனையத் தயாரில்லை...
அவர்களுக்கெனப் பெய்ய
மழையும் தயாரில்லை...
ஸ்ரீமதி.
Wednesday, May 20, 2009 | கனவு காண: அம்மா, அறிவிப்பு, கவிதை, கவிதை மாதிரி, சுய புராணம் | 33 Comments
இன்றும் ஒரு நாளென..
அன்று படித்த வரிகளின் தாக்கம்
இன்று இல்லை என் கவிதைகளில்.
துரு ஏறிய இரும்புப்பெட்டியின் உள் விளிம்பில்
காய்ந்துவிட்டிருந்தது
கட்டைவிரலின் இரத்தம்.
கற்றை முடிகளோடு தெருவில் கிடந்தது
நேற்றைய புதிய சீப்பு.
காலம் மட்டும் சுழன்றுகொண்டேயிருந்தது
இன்றும் ஒரு நாளென...
அறிவிப்பு(?!), டிஸ்கி(?!), (ஏதோ ஒன்னு... சொல்லுங்கப்பா): நிஜமாவே அன்று படித்த வரிகளின் தாக்கம் இன்று இல்லை என் கவிதைகளில். கடைக்கு கொஞ்ச நாள் லீவ் விட்டுடவா?? அதாவது, கனவுகளுக்கு விடுமுறை கொடுத்தனுப்பவா இந்த விடுமுறை நாட்களில்??
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Friday, May 15, 2009 | கனவு காண: அறிவிப்பு, கவிதை, கவிதை மாதிரி | 72 Comments
கரையோரம்
கனவில் இதுவரை
-
▼
2009
(48)
-
►
April
(14)
- கனவுகள் விற்பனைக்கல்ல...
- மழைக்கம்பிகள்
- பக்கத்து வீடு
- கவிதை தூண்டும் வரிகள்
- வட்டத்திற்குள் பெண்..[எச்சரிக்கை: தொடர் பதிவு]
- குறிப்புகளாய் சில கவிதைகள்
- ரசிக்கத் தெரியாதவனின் கவிதை
- சந்திப்புகள்
- வேலிப் பூக்கள்
- காதல் தோய்ந்து
- அம்மாவின் வாசனை
- எனக்கென்று ஒரு வானம்...
- நர்சிம் அண்ணாவுக்காக.....
- கண்ணாடி துகள்கள்
-
►
April
(14)
கனவுகளில்
-
அடங்குடா நாயே!!!!!12 hours ago
-
ஸ்ரீமதிக்கு திருமண வாழ்த்துக்கள்!!22 hours ago
-
இலையில் சோறு போட்டு...1 day ago
-
-
12 கேள்விகள் (வெட்டீஸ் வெர்ஷன்)1 week ago
-
-
விடுபடுதலும்....விடைப்பெறுதலும்!!!2 weeks ago
-
வயர்கூடை!2 weeks ago
-
நடிகர் விஜய் ஒரு வலையறிமுகம்2 weeks ago
-
அமெரிக்கா ரிட்டர்ன்...3 weeks ago
-
-
Book Tag1 month ago
-
-
உன்னை நீயே காத்திரு...1 month ago
-
இலையுதிரா காலம்1 month ago
-
Should I or Shouldn’t I2 months ago
-
இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?3 months ago
-
காதலிப்போமா?????4 months ago
-
நீ...நான்...காதல்!!!4 months ago
கனவில்
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!







