எல்லாக்கனவுகளும்...
Tuesday, February 14, 2012 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 6 Comments
படுத்தியதில் பிடித்தது...






Monday, June 20, 2011 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 13 Comments
முடிவிலி...






Wednesday, March 09, 2011 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 14 Comments
பின்னிரவு மழை
Friday, February 25, 2011 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 6 Comments
கனவுகள் மீட்டும் நினைவுகள்...
கரிய இருளின் உருவங்கள்
புரிய தொடங்கிய இருளில்,
உன்னுருவம் தெரிய,
உணர்ந்து,
கனவு கலைந்து எழுந்தேன்...
மீதமிருந்த நினைவுகளை
மீட்டெடுத்து....
மாலை எனத்தொடுத்து
உனக்கணிவித்தப் பின்னும்
ஏதோ குறைவதாய் தோன்ற...
இன்று
இதயம் அனுப்பியுள்ளேன்...
நினைவுகளுடன் சேர்த்துக்கொள்...
திருப்பிமட்டும் அனுப்பிவிடாதே....
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Monday, February 14, 2011 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 6 Comments
ஹிட்லர் மீசை
மணித்துளிகள் சொட்டுச் சொட்டாய்
நெற்றிப் பொட்டில் தெறித்து
உயிர் நனைக்க....
காதலும், காற்று வாங்க
கனவுடன் கைக்கோர்த்து,
கதைகள் சொல்ல...
கண்களுக்குள் கனல் மெல்ல
கனன்றெரிய...
சிருங்கார ரசமிழந்து
நாழிகைகள் நான் கடத்த...
ஏதோ ஒரு கனவில்
எங்கோ சஞ்சரித்து..
போர்வைக்குள் ஒருக்களித்திருக்கும் உனக்கு
ஏனோ வரைந்துப்பார்க்கிறேன்
ஹிட்லரின் மீசை....
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Thursday, December 02, 2010 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 8 Comments
தலைப்பிட்டிருக்கலாம்.....
காலை தேநீர்....
கனவின் நீட்சி...
குடையின் ஈரம்...
குடிசையின் அழுகுரல்...
கொடிபடர்ந்த கிளை...
கொஞ்சும் கிளி....
கொலுசின் சிணுங்கல்...
கோவைப்பழம் நிறம்...
கோபத்தில் சிவக்கும் கன்னம்....
ஆனந்தம் கொண்ட கண்ணீர்...
அவசிய நேரத்துதவி...
என,
இவை ரசிக்கும் நேரம்
வீணென உணர்ந்தேன்...
உன் பிஞ்சு பாதங்களில்
உருண்ட மழைத்துளி
கண்ட பின்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Saturday, November 20, 2010 | கனவு காண: கவிதை, கவிதை மாதிரி | 19 Comments
கரையோரம்
ரசிகையாய் இங்கு...
கனவில் இதுவரை
கனவுகளில்
-
-
-
-
தீர்ப்பின் வழக்கு2 weeks ago
-
-
காதல் புத்தாண்டு1 month ago
-
மோட்சப் பிரசாதம்1 month ago
-
சீர்காழி கோவிந்தராஜன்2 months ago
-
-
போராளி - திரைவிமர்சனம்5 months ago
-
வாழ்த்துகள் தீபா @ கபீஷ்8 months ago
-
விடையாய் நீ!!8 months ago
-
‘இ’ எனும் நைட்மேர்10 months ago
-
நிழற்படம்1 year ago
-
ஸ்டேட்மெண்ட்.1 year ago
-
எண்ணங்கள் விரிக்கும் வலை...!1 year ago
-
போஸ்டர் கலாச்சாரம்1 year ago
-
மீள்வருகை2 years ago
-
ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க!!!2 years ago
-
நம்பிக்கை துரோகம்2 years ago
-
வளமான வாழ்த்துக்கள்2 years ago
-
Should I or Shouldn’t I3 years ago
-
இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?3 years ago
-
காதலிப்போமா?????3 years ago
கனவில்
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!






