எல்லாக்கனவுகளும்...

மண் மூடிய இடத்திலிருந்து
சிலிர்த்து
மெல்லத் துளிர்க்கத் தொடங்கி
செடியென விடியல் தேடத்துவங்குகின்றன
என் கனவுச்செடிகள்....
பூக்களரும்பும் வேளை
தேனீக்களாய் சிலர்,
காய் கனியும் தருணங்களில்
என் கனவுப்பறிக்கும் கண்களுடன் சிலர்,
என நேற்றுப்பார்த்த கீரைக்காரியில் துவங்கி,
தொலைக்காட்சித் தொடர்களின்
வில்லிகளின் முகங்கள் வரை
பறவை முகங்களாய்
நீளும் என் பட்டியல்....
பழம்தின்று இட்ட எச்சத்திலிருந்து
மீண்டும் முளைக்குமென்
கனவுச்செடி...

வளர்ந்தப்பின் தட்டிப்பறிக்கப்படலாம்
என் எல்லாக்கனவுகளும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

படுத்தியதில் பிடித்தது...

உன்னை
எப்படி அழைப்பது என்பதில்
தொடங்கியதென்
முதல் குழப்பமும்
பின் காதலும்...
பளு தூக்கும்
குழந்தையெனத் திணறுகிறேன்
உன் காதல் உணர்ந்த
கணம் முதல்...
கன்னம் தர
மறுத்துவிட்டாள்
தற்கொலை செய்துக்கொண்டன,
முத்தங்கள் அனைத்தும்
இதழ்களில்...
ரோஜாச்செடி வளர்ப்பதெப்படி?
என ஆராய்கிறாய்
மரம் வெட்டினால்
அச்சச்சோ என்கிறாய்
என் இதயத்தை மட்டும்
பிடுங்கிக்கொண்டு சிரிக்கிறாய்...
படித்ததில்
பிடித்தது என்ன?
என்று கேட்கிறாய்...
உன் கண்களைக்கண்டதும்
அனைத்தும் மறந்த எனக்கு,
நீ படுத்தியதில்
பிடித்தது கேட்டிருந்தால்
சொல்லியிருப்பேன்...
கண்களை மூடிக்கொள்
காதில் ரகசியம் சொல்வேன்
என
நீ சொல்லியவையெல்லாம்
இன்றுவரை
நீ மட்டுமே அறிந்த
ரகசியங்கள்...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

முடிவிலி...

ஒவ்வொரு முறை
உனைக் காணும்போதும்
என் காதல்
உன்னை இட்டு
தன்னை நிரப்பிக்கொள்கிறது....

கொடுத்த முத்தத்தின்
ஈரத்தை
இதழ்களாலேயே
துடைக்கும் வித்தை
எங்கு கற்றாய்?

எனக்கென இப்போது
என் தனிமைக்கூட இல்லை
அங்கும் வந்தமர்ந்துக்கொள்கிறது
உன் நினைவுள்...

ஆளரவமற்ற சாலையில்
மரங்கள் உதிர்த்தப் பூக்கள் போன்றது
உன்னிடம் சொல்லாத
என் காதல்...
உன்னிடம் சொல்லாத
என் காதல்
காற்று வெளியில் பயணித்து
எங்கோ சேர்கின்றன
முடிவிலியாய்...

எனக்கு மகிழ்ச்சியே
உன்னிடம் வெளிப்படுத்தாத
என் காதல்
முடிவிலியாய் வாழ்வதில்...
வாடகைக்கல்ல
விற்பனைக்கு என்னிதயம்...
விலை உன்னிதயம்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

பின்னிரவு மழை


வசீகரமான வார்த்தைகளாலான
வாக்கியங்கள் கோர்த்து...
பின்னும் ஏதோ குறைவதாய் தோன்ற...
தடுமாற்றம் அணிந்து,
அதிகபட்ச வெட்கம் ஊற்றி,
நாணம் குழைத்து...
நீ கொடுத்துச்சென்ற
காதலுக்குப்பின்...
மழையுடனே கழிகின்றது...
என் பின்னிரவுகள் அனைத்தும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கனவுகள் மீட்டும் நினைவுகள்...

கரிய இருளின் உருவங்கள்
புரிய தொடங்கிய இருளில்,
உன்னுருவம் தெரிய,
உணர்ந்து,
கனவு கலைந்து எழுந்தேன்...
மீதமிருந்த நினைவுகளை
மீட்டெடுத்து....
மாலை எனத்தொடுத்து
உனக்கணிவித்தப் பின்னும்
ஏதோ குறைவதாய் தோன்ற...
இன்று
இதயம் அனுப்பியுள்ளேன்...
நினைவுகளுடன் சேர்த்துக்கொள்...
திருப்பிமட்டும் அனுப்பிவிடாதே....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஹிட்லர் மீசை

மணித்துளிகள் சொட்டுச் சொட்டாய்
நெற்றிப் பொட்டில் தெறித்து
உயிர் நனைக்க....
காதலும், காற்று வாங்க
கனவுடன் கைக்கோர்த்து,
கதைகள் சொல்ல...
கண்களுக்குள் கனல் மெல்ல
கனன்றெரிய...
சிருங்கார ரசமிழந்து
நாழிகைகள் நான் கடத்த...
ஏதோ ஒரு கனவில்
எங்கோ சஞ்சரித்து..
போர்வைக்குள் ஒருக்களித்திருக்கும் உனக்கு
ஏனோ வரைந்துப்பார்க்கிறேன்
ஹிட்லரின் மீசை....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

தலைப்பிட்டிருக்கலாம்.....


காலை தேநீர்....
கனவின் நீட்சி...
குடையின் ஈரம்...
குடிசையின் அழுகுரல்...
கொடிபடர்ந்த கிளை...
கொஞ்சும் கிளி....
கொலுசின் சிணுங்கல்...
கோவைப்பழம் நிறம்...
கோபத்தில் சிவக்கும் கன்னம்....
ஆனந்தம் கொண்ட கண்ணீர்...
அவசிய நேரத்துதவி...
என,
இவை ரசிக்கும் நேரம்
வீணென உணர்ந்தேன்...
உன் பிஞ்சு பாதங்களில்
உருண்ட மழைத்துளி
கண்ட பின்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி
தன் பெருமை தானறியாதவள்..
View my complete profile

Click 'n' Earn

கனவில் இதுவரை

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது